முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்.

காத்தான்குடியில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது இந்த கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலினால் வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்துள்ளது.

இதனையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.