முன்னாள் பிரதமரை கைது செய்து சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் முதன்மை சந்தேக நபரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்து சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் மா அதிபரிடம் ஐக்கிய மக்கள் சக்தியினால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினர் பதவி விலகும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு கலந்துரையாடல் மற்றும் நிகழ்ச்சித் திட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.