மகிந்தவின் இருப்பிடத்தை வெளிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தாம் அங்கு தங்கியிருப்பதாகவும், நாடு வழமைக்குத் திரும்பியவுடன் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இருந்து ஹெலிகொப்டர் புறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் நேற்று பகிரப்பட்டது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த ஹெலிகொப்டர் மகிந்த குடும்பத்தினர் வெளியேற வழங்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.