கோட்டாகோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த காலப்பகுதியில் பொது இடங்களில் ஒன்றுகூடி இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் அதுதொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.