‘மே – 09’ வன்முறைச் சம்பவத்தின்போது செஹான் சேமசிங்கவின் வீட்டில் 60 பவுண் தங்க நகைகள் மாயம்!

இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுண் தங்க நகைகள் காணாமல்போயுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும் காணாமல்போயுள்ளது.

அனுமதி பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரால், அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.