கண்டி மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய உறுப்பினர் நியமனம்.

கண்டி மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு கிங்கிஸ்லி பிரசன்ன குமார புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு கண்டி டெவொன் ஹோட்டலில் இடம்பெற்றது.
கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி மாநகர சபை உறுப்பினராக கிங்கிலிஸ்லி பிரசன்ன பதவிப் பிரமாணம் பெற்றுக் கொண்டார்.

இதில் இந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சப்பரகமுவ மாகாண சபை ஆளுநர், கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சிவபாலன், ஐ. ஐனூடீன், வஹாப் மாஸ்டர் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட , தொகுதி அமைப்பாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.