விஷப்பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு… ஆத்தூரில் சோகம்

ஆத்தூர் அருகே விஷப்பாம்பு தீண்டியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமம் வடக்குகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உறபத்தியாளர்கள் சங்கத்தில் பால் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புனிதா என்கிற மனைவியும் அபிராமி, சரண்யா என்ற இரு மகள்களும் உள்ளனர். சபரீஸ்வரன் என்கிற ஒரு மகனும் இருந்தான்.

இந்த நிலையில் சபரீஸ்வரன் தனது அக்காக்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது சபரீஸ்வரனை விஷபாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் சிறுவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளான். இதை பார்த்த சகோதரிகள் சத்தம் போட்டுள்ளனர்.

உடனே சபரீஸ்வரனை மீட்ட அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.