டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்காக இன்று கல்லணை திறப்பு

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, வரலாற்றில் முதல் முறையாக மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது.

இதனையடுத்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது. திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிகழ்ச்சியில் நான்கு அமைச்சர்கள், ஐந்து மாவட்டகளின் சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் அனைத்து வாய்க்கால்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் சிறப்பாக அமைந்ததுள்ளது. வடிகால் வாய்க்கால் கூட இந்த ஆண்டும் சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளது.

இதனால், மழை காலங்களிலும் மழைநீர் தங்கள் விளை நிலங்களில் புகாது எனவும், மழைநீரால் பயிர் பாதிக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.