மருந்துத் தட்டுப்பாட்டுக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு சுகாதார அமைச்சர் நம்பிக்கை.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அவர்,

“மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்துள்ளது.

மருந்துகளைக் கோரியதன் பின்னரே மருத்துவ நிறுவனங்கள் அவற்றின் உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கும் என்பதால், மருந்துகளை இறக்குமதி செய்ய மூன்று மாதங்கள் ஆகும்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் அந்த நிறுவனங்கள் மருந்துகளை விநியோகிப்பதாக உறுதியளித்துள்ளன.

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா என்பன உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.