21 இற்கு சு.க. முழு ஆதரவு! – விஜயதாஸவுக்கு மைத்திரி கடிதம்.

தாமும், தமது கட்சியும் உத்தேச 21ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்குக் கடிதம் ஒன்றினூடாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

உத்தேச வரைவிலுள்ள திருத்தங்களுக்கு உடன்பாடு வழங்குதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமது கட்சி சார்பில் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.