மொட்டு எம்.பிக்களுடன் கோட்டா இன்று சந்திப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டமூல வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான பின்னணியில் கடந்த 26ஆம் திகதி கட்சித் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.