சகோதரன், சகோதரி வெட்டிப் படுகொலை புத்தளத்தில் நேற்றிரவு கொடூரம்.

புத்தளம் மாவட்டம், நவகத்தேகம – முல்லேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சகோதரனும், 25 வயதுடைய சகோதரியுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்போது கணவன் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். அதேநேரத்தில் மனைவியையும் கணவன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேகநபர் காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.