’21’ இற்கு ஐந்து யோசனைகள் சஜித் அணியால் முன்வைப்பு.

நீதி அமைச்சர் விஜயதாசஸ ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த யோசனைகள் பின்வருமாறு:-

* ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற 19ஆவது திருத்தத்தின் விதிகளை அரசமைப்பில் இணைத்தல்.

* சட்ட சபையின் பரிந்துரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு மேலதிகமாக நாணயச் சபையின் ஏனைய உறுப்பினர்களை நியமித்தல்.

* தேசிய முன்னுரிமைகள் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தை ஒரு சுயாதீன ஆணையமாக நியமித்து அதன் உறுப்பினர்களை சட்டப் பேரவையின் பரிந்துரையின்படி நியமித்தல்.

* ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆளுங்கட்சியின் அனைத்து அலுவலகப் பணியாளர்களும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதைக் கட்டாயமாக்குதல். அவ்வாறு செய்யத் தவறினால் கடுமையான தண்டனைகளுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல்.

* திருடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறுவதில் இலங்கை அரசு ஒரு தரப்பினராக இருந்து, சர்வதேச உடன்படிக்கைகளை அங்கீகரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்குதல் ஆகிய ஐந்து யோசனைகளையும் முன்வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.