கல்முனையில் காணாமல்போன குடும்பஸ்தர் இன்று சடலமாக மீட்பு.

பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன நேற்றுமுன்தினம் மாலை காணாமல்போயிருந்த நிலையில் இன்று கல்முனை பொது மைதானத்தில் சடலமாகக் காணப்படுகின்றார் என்று பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்குக் கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்தனர்.

சடலத்துக்கு அருகிலிருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.