வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்குக் கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலையத் தகவல் தெரிவித்தது.

கைதான நபரிடமிருந்து ஒரு இலட்சத்து 17 ஆயிரம் கனடா நாட்டு டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 19 ஆயிரம் யூரோவும் சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.