போதைப்பொருள் விற்பனை: 12 பேர் வசமாக சிக்கினார்கள்.

கண்டி, நாவலப்பிட்டி நகரில் மிக நீண்டகாலமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளைப் பொலிஸார் மற்றும் கம்பளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், ஏனைய 11 பேரும் போதைப்பொருள் விற்பனை பிரதிநிதிகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைதுசெய்தபோது, அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 880 மில்லிகிராம் ஹெரோய்ன், 560 மில்லிகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 – 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் நாவலப்பிட்டி, ஓவிட்ட, ஆகரஓயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் நாவலப்பிட்டி பதில் நீதிவான் சுனெத்ரா கொட்டவலகெதர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.