கோட்டாபய – ‘மொட்டு’ இன்று முக்கிய பேச்சு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்றிரவு நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த கையோடு இந்தக் கூட்டம் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.