இலங்கையில் 7 நாட்களுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை! – வெளிவந்தது திடுக்கிடும் தகவல்.

இலங்கையில் கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுபாய் உட்பட வெளிநாடுகளில் பதுங்கி வாழும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கட்டத்தல்காரர்களில் உத்தரவுகளுக்கமையவே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தக் கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்குச் சாட்சியாக இருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்களுக்குத் துப்பு – தகவல் வழங்கியவர்களே தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என இலத்திரனியல் ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.