பஸில் ராஜபக்ச நாளை விசேட ஊடக சந்திப்பு.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாளை விசேட ஊடக சந்திப்பை நடத்தவுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் முற்பகல் 11 மணியளவில் ஊடக சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பஸிலின் அவசர ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தெற்கு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.