அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன் – பாடகி ஜொனிதா.

அனிருத்தை திருமணம் செய்ய தனக்கு சம்மதமென பாடகி ஜொனிதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வருபவர், அனிருத். இவரது இசையில் சமீபத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

படத்தின் பின்னணி இசை பேசப்பட்டு வருகிறது. அனிருத் இசையில் தனுசின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாக இருக்கிறது. ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோரின் புதிய படங்களுக்கும் இசையமைக்கிறார். அனிருத் திருமணம் குறித்து தினம் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கீர்த்தி சுரேசுடன் காதல் என பேசப்பட்டது. பின்னர் அது இருவரது தரப்பிலும் மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விளையாட்டு வீராங்கனை ஒருவருடன் அனிருத் இணைத்து பேசப்பட்டார்.

அந்த தகவலும் உண்மையில்லை என்று தெரியவந்தது. இதற்கிடையில் அனிருத் குறித்து இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தி கூறிய பதில், தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப் பாக பேசப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜொனிதா காந்தியிடம், ‘சூர்யா, ரன்வீர் சிங் அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. ”இந்த மூன்று பேரில் அனிருத்துக்கு மட்டும் தான், இதுவரை திருமணம் நடக்கவில்லை.

அந்த காரணத்தினால் மட்டும், நான் அவரை திருமணம் செய்து கொள்வேன்” என்று அவர் கூலாக பதிலளித்தார். அனிருத் இசையமைக்கும் படங்களில் தவறாமல் இடம்பெறும் முக்கியமான பாடகியாக இருக்கிறார், ஜொனிதா காந்தி. இதனால் அனிருத் – ஜொனிதா இடையே காதல் என்றும் பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.