முகமூடி கும்பலின் தாக்குதலில் மூவர் படுகாயம்; 10 பவுண் நகை கொள்ளை பருத்தித்துறையில் அதிகாலை சம்பவம்.

யாழ்., பருத்தித்துறையில் வாளுகளுடன் வீடொன்றினுள் இன்று அதிகாலை நுழைந்த முகமூடிக் கொள்ளைக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை வேளை முகங்களை மறைத்தவாறு, வாளுகளுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்த மூவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டு, ஏனையவர்களை வாள்முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்தவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.