தந்தையைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்.

மகன் ஒருவர் தனது தந்தையைக் கட்டையால் அடித்துப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் குருவிட்ட பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியைத் தாக்கியுள்ளார். இதன்போது மருமகளைக் காப்பற்ற முற்பட்ட தனது தந்தையைக் கட்டையால் அடித்து மகன் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.