மன்னார், கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது

மன்னார், உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10ஆம் திகதி மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்தனர்.

நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் உள்ளிட்ட குழுவினர் மற்றொரு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தகராறில் ஈடுபட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னரே இருவரும் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்தது.

இச்சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிலங்குளத்தில் இச்சம்பவம் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மாட்டு வண்டி போட்டி சம்பந்தமாக எழுந்ததாகவும் , அதன் தொடர்ச்சியாகவே கடந்த 10ம் திகதி மீண்டும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டு மற்றும் கொலையில் முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 வயதான ஜேசுதாசன் ராமையா மற்றும் 34 வயதான ஜேசுதாசன் தேவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சகோதரர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தாக்குதலை நடத்தியோரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னைய செய்தி
https://www.ceylonmirror.net/83757.html

Leave A Reply

Your email address will not be published.