173 கைதிகள் இன்று விடுதலை.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 173 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு – மகசீன், தல்தென, வட்டரெக, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலனறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல, திருகோணமலை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலைகளின் கைதிகளே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.