குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் படல்கம – வெலிகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் படல்கம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பழைய தகராறொன்றின் காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரை மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.