கோர வீதி விபத்தில் சிறுவர்கள் உட்பட நால்வர் பலி!

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு Pas-de-Calais மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

Saint-Rémy-au-Bois மற்றும் Saulchoy நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணி அளவில் அதிவேகமாக பயணித்த இரு மகிழுந்து ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு படையினர் களத்தில் போராடி அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மிக நீண்ட நேரத்துக்கு வீதி முடக்கப்பட்டது.

விபத்துக்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.