மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் “ரத்து மல்” தீப்பாசறை.

மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை என்ற பெருமையுடன் கிழக்கு மாகணத்தில் சாரண வரலாற்றிலே முதல் முறையாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் குருளைச் சாரண மாணவர்களின் “ரத்து மல்” எனும் தீப்பாசறை நேற்று (14) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6 மணியளவில் பெளர்ணமி நிலவில் கல்லடி கடற்கரையோரத்தில் பாடசாலை அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட குருளைச்சாரண உதவி ஆணையாளர் திருமதி தமிழ்ச்செல்வன் மற்றும் மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் இணைப்பாளர் து.நகுலேஸ் ஆகிய அதிதிகளுடன், சாரண தலைவர்கள், சாரண ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.