யாழில் வெடிகுண்டுகளுடன் இருவர் சிக்கினர்!

யாழ்., புலோப்பளைப் பகுதியில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி. குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளைச் சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு மருதங்கேணிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.