எரிபொருள் இறக்குமதியில் சிக்கல்: இலங்கைக்கு வரவேண்டிய கப்பல் இந்தியாவை நோக்கி …..

இலங்கையில் இருந்து எண்ணெய் இறக்குமதி இன்று முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இலங்கைக்கு வந்த எரிபொருள் தாங்கிகள் இதுவரை இலங்கைக்கு வரவில்லை எனவும் , அவசரகால கொள்முதல் நடவடிக்கைகளின் கீழ் முறையான டெண்டர் நடைமுறைகள் இன்றி இந்த கப்பலில் வரும் எண்ணையை வாங்க முயற்சித்ததாகவும், ஆனால் அந்த கப்பல்,இலங்கைக்கு வராமல் , தற்போது இந்தியாவை நோக்கி பயணிப்பதாகவும் , அதனால் முழு நாடும் முடக்கப்படும் தருவாயில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் படையின் யாழ்.மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.