ஜனாதிபதியின் கழுத்தைப் பிடித்து துரத்த வேண்டும்..- மேர்வின் சில்வா (வீடியோ)

எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை உடைத்து ஜனாதிபதியின் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்த வேண்டும் என்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ராஜபக்சக்கள் ஸ்ரீ பாதத்தில் மணியை அகற்றி விற்று, பன்னிரு விளக்கை விற்று, தாகப பொக்கிஷங்களை எடுத்து, அதமஸ்தானத்தை வணங்கி, எல்லாளன் பயன்படுத்திய தங்க வண்டியை திருடி, பிரபாகரன் மறைத்து வைத்திருந்த தங்கத்தையும் பணத்தையும் கூட கொள்ளையடித்துச் சென்றவர்களே ராசபக்சக்சவினர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.