‘கொரோனா’வின் புதிய திரிபு கண்டுபிடிப்பு; ஏனைய வைரஸ்களைவிட வேகமாகப் பரவும்.

கொரோனா வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையினுள் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ‘பி.ஏ. 5’ என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தப் புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகின்றது எனவும், முந்தைய கொரோனா வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய வகையும் கண்டறியப்பட்டுள்ளது. இது பி.1.1.529 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் வேகமாகப் பரவி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலக சுகாதார விஞ்ஞானிகள் இன்னும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ‘பி.ஏ. 5’ வைரஸ் புதியதொரு திரிபாக உருவெடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.