மட்டக்களப்பில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதல் ஐவர் படுகாயம்; 5 மோ.சைக்கிள்கள் சேதம்.

மட்டக்களப்பு – ஊறணிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்துக்கு முன்னால் இன்று காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.