Ceypetco பெட்றோல் நிலையங்கள், எரிபொருள் வழங்குவதை நிறுத்தியது!

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் , எரிபொருள் வழங்கும் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக Ceylon Petroleum Storage Terminals Limited (ceypetco) தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (28) முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.