கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகளில் 232 பேர் கைது.

பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 232 பேரைப் பாதுகாப்புப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன், அங்கிருந்து 500 இற்கும் மேற்பட்ட கைதிகள் இன்று அதிகாலை தப்பியோடியிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது, நீண்ட காலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 998 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.