உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களின் மோ. சைக்கிளில் இருந்து பெற்றோல் திருட்டு.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

அதில் பங்கேற்கச் சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெற்றோல் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புக் கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார்.

தாம் நீண்ட வரிசைகளில் பல மணி நேரங்களை செலவழித்து, காத்திருந்து சிறுகச் சிறுகச் சேமித்த பெற்றோல் திருடப்பட்டுள்ளமையால் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளோம் என்று உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.