வாட்டி வதைக்கின்றது வறுமை; மேலும் நால்வர் தமிழகத்துக்கு!

இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் இன்று காலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை தலைவிரித்தாடுகின்றது. இதையடுத்துப் பலர் இங்கிருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாகத் தப்பிச் செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று 4 பேர் இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழகத்துக்குக் கடல் வழியாகச் சென்றுள்ளனர்.

வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வரே தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

இவர்களில் இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனும் உள்ளடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.