கோட்டாபய உடனடியாக பதவி விலக வேண்டும்! – மொட்டு எம்.பி. டிலான் வலியுறுத்து.

“நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோல்வி அடைந்துவிட்டார். தன்னால் முடியாது என்பதைப் பிரதர் மஹிந்த ராஜபக்சவும் நிரூபித்துவிட்டார். எனவே, இதனை விளையாட்டாகக் கருதக்கூடாது.

ஜனாதிபதி உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசை அமைப்பதற்கு இடமளிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.