வீடுகளில் எரிபொருள் பதுக்கல்: கிளிநொச்சியில் ஒருவர் கைது!

கிளிநாச்சி நகரப் பகுதியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசல், 950 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டன. இதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.