மட்டு. வாழைச்சேனையில் ஹெரோயினுடன் ஒருவர் சிக்கினார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்றிரவு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கதிரவெளி விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மக்களடி வீதி, வாழைச்சேனை – 4 எனும் முகவரியில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளை 38 வயதான குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர் நீதிமன்ற நடவடிக்கைக்காக வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.