எரிபொருள் இறக்குமதி நெருக்கடி.. பதவியை ராஜினாமா செய்ய காஞ்சன தயார்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு காஞ்சன விஜேசேகர தனது அமைச்சினை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடனை செலுத்தாத நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய செல்லும் போது பல சப்ளையர்கள் வெளிநாட்டு வங்கியில் சான்றிதழ் கேட்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதற்கான டெண்டர்களுக்கு எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வராத நிலை காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.