சஜித் – மைத்திரி முக்கிய சந்திப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை, அரசமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வகட்சி அரசு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது என அறியமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.