பதவி விலக நான் தயார் பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு.

“நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய உரிய வேலைத்திட்டத்தை எந்தக் கட்சியாவது முன்வைத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலக நான் எந்நேரமும் தயார்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமது கட்சிக்கு ஆட்சி வழங்கப்படும் பட்சத்தில், 6 மாத காலத்தில் நாட்டை வழமைக்குக் கொண்டு வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். அப்படிச் செய்தால் அவருக்கு நோபல் பரிசை வழங்கவும் முடியும்.

எனவே, அவ்வாறான திட்டம் இருந்தால் அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு அநுரகுமாரவைக் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்திலாவது முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்படும் திட்டம் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவருக்காகப் பிரதமர் பதவியை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.