மீண்டும் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் இரு நாட்களில் 17 பேர் கைது.

எல்லை தாண்டி இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த இரு தினங்களில் மாத்திரம் 17 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நேற்று மாலை 5 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களும் விசைப்படகொன்றில் கோடியாக்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டனர். இவர்கள் எல்லை தாண்டி யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களைக் கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தக் கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, நேற்றுமுன்தினம் மாலையும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களைப் பருத்தித்துறை நீதிவான் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.