ஜனாதிபதி மாளிகை முற்றுகை; ஹிருணிகா உட்படப் பலர் கைது – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 9 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப் போகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கிருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அந்தப் பகுதியில் தற்போது பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் அவர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலால் அந்தப் பகுதியில் வீதியில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.