இலங்கை மக்களுக்கு உதவ தமிழக பொலிஸார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதியுதவி.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்த மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது. இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் ரூ. 1.34 கோடியும் இந்திய பொலிஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் ரூ. 6.63 லட்சமும் என மொத்தம் ரூ. 1.40 கோடி நிதி பெறப்பட்டது.

இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.