காலி எரிபொருள் நிலையத்தில் மோதல்! – ஒருவர் பலி; மூவர் படுகாயம்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் காலியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காகத் தமது காரில் பிரவேசித்த நபர் ஒருவர், தனது நண்பரின் வர்த்தக நிலையத்துக்கு முன்பாக இருந்த சிறிய இடைவெளியினூடாக எரிபொருள் வரிசைக்கு நடுவே குறிந்த காரை நுழைக்க முயன்றுள்ளார்.

அதன்போது, வரிசையில் காத்திருந்தவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஹபராதுவ – யடகல பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரே பலியானார்.

படுகாயமடைந்த மூவரும் காலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.