கோட்டாவுக்குத் தக்க பாடம் புகட்ட நாளை சகலரும் அணிதிரள்வோம் தமிழ் முற்போக்குக் கூட்டணி அழைப்பு.

“நாட்டின் எதிர்காலம் கருதி நாளை 9ஆம் திகதி அனைவரும் ஓரணி சேர்வோம். மக்களை வதைக்கும் சக்திகளுக்கு ஒற்றுமையால் தக்க பாடம் புகட்டுவோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை நாடெங்கும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் திகாம்பரம் எம்.பி. இவ்வாறு பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.