பெற்றோல் கியூ மோதலில் 25 வயது பல்கலைக்கழக மாணவர் மரணம்!

பெட்ரோல் கியூவில் நின்றபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, மாகல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 25 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபராதுவ, சிவவல, யட்டகல பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் மூவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.