கோட்டா உடன் விலக வேண்டும் – இலங்கைத் திருச்சபையும் வலியுறுத்து.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் திருச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறக்கூடிய உண்மையான பிரதிநிதித்துவ இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் இலங்கைத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இலங்கைத் திருச்சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஒருவர் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே அவரின் பதவிக் காலம் முறையானதாக இருக்கும் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.