கேரளாவில் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்ட பைக் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்…

கேரள மாநிலம் மலப்புறம், ஆலத்தியூர் சந்திப்பில் புதன்கிழமை அன்று தனியார் பேருந்து ஒன்று கவனக்குறைவாக வளைவான பகுதியில் திரும்ப முயன்றுள்ளது.

இதில் தனியார் பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையோரம் நின்ற பைக்கில் பேருந்தின் பக்க வாட்டு பகுதி உரசி பைக்குடன் ஓட்டுனரும் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கி உள்ளனர். இதில் பேருந்தின் சக்கரம் பைக்கின் மீது ஏறியதும், பைக்கின் பின்னால் இருந்தவர் கூச்சலிட்டு பேருந்தில் தாறுமாக அடித்துள்ளார்.

இந்த சத்தத்தால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். அதன் காரணமாக பைக் ஓட்டுனரின் உயிர் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இந்த விபத்து குறித்து ஆலத்தியூர் போலீசார் நடத்திய விசாரணையில் பைக் ஓட்டி வந்தவர் கூட்டாயம் பகுதியை சார்ந்த பகத் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கவனக்குறைவாக பேருந்தை இயக்கியதாக பேருந்து ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.